10 நாட்கள் ஓய்வு
ஐபிஎல் தொடர் 29ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பெரும்பாலானோர் விடுமுறைக்கு சென்று, 6ஆம் தேதியே டெல்லிக்கு திரும்பினர். இருப்பினும் இந்திய அணியில் இடம் பிடித்த பெரும்பாலான வீரர்கள் பிளே ஆப்க்கு செல்லவில்லை. இதனால் அவர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு கிடைத்திருக்கும்.
Recommended Video
பயிற்சி ஆட்டம்
ஆனால் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஜூன் 1ஆம் தேதியே இந்தியா வந்தடைந்தனர். அதன் பிறக 2ஆம் தேதி பயிற்சியை தொடங்கிவிட்டனர். அதாவது இந்தியாவை விட 5 நாட்களுக்கு முன்பு தங்களை தென்னாப்பிரிக்க வீரஙாகள் தயார் படுத்தி கொண்டனர். மேலும், கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள், டெல்லியில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கு நேரமில்லை
இதனால் பெரும்பாலான தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி கொண்டனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் வந்ததே 6ஆம் தேதி. இதில் பயிற்சி முகாமில் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்பதை தவிர, எப்படி பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடியும்.
அலட்சியத்துக்கு கிடைத்த பரிசு
இது நம்ம ஊர் மைதானம் தானே, அதுவும் ஐபிஎல் அனுபவத்துடன் திரும்பி இருக்கிறோம் என்ற அலட்சியத்தோடு பிசசிஐயும் வீரர்களும் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தங்களுக்கு கிடைத்த நேரத்தை சிறப்பதக பயன்படுத்தி கொண்டது. இதனால் இரண்டாவது போட்டியிலாவது இந்தியா விட்டதை பிடிக்க வேண்டும் இது நம்ம ஊர் மைதானம் தானே, அதுவும் ஐபிஎல் அனுபவத்துடன் திரும்பி இருக்கிறோம் என்ற அலட்சியத்தோடு பிசசிஐயும் வீரர்களும் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தங்களுக்கு கிடைத்த நேரத்தை சிறப்பதக பயன்படுத்தி கொண்டது. இதனால் இரண்டாவது போட்டியிலாவது இந்தியா விட்டதை பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.