
கொரோனா விதி
கொரோனாவால் போட்டி தடைப்படாமல் இருக்க பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட தகுதியுடைய 12 பேர் இருந்தால் நிச்சயம் போட்டி நடைபெறும். 12 பேரை ஒரு அணியால் களமிறக்க முடியவில்லை என்றால் அந்த போட்டியை பின்னாளில் நடத்த முடியுமா என்று பிசிசிஐ ஆலோசனை செய்யும். அப்படி முடியாத பட்சத்தில் எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

புதிய பேட்ஸ்மேன்
இதே போன்று ஓவரின் கடைசி பந்தை தவிர, மற்ற சமயங்களில் பேட்ஸ்மேன்கள் கேட்ச் ஆகும், களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் தாண்டினாலும் இனி புதிய பேட்ஸ்மேன்கள் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார். இந்த விதிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு இறுதியில் தான் அமலுக்கு வருகிறது. ஆனால் இது ஐபிஎல் தொடரில் கடைபிடிக்கப்பட உள்ளது.

சூப்பர் ஓவர்
இதே போன்று லீக் போட்டியில், ஆட்டம் சமனில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் வீசப்படும். ஆனால் சூப்பர் ஓவர் வீச போதிய நேரமில்லை., அதற்கான சூழல் இல்லை என்றால் இனி புள்ளி பட்டியலில் எந்த அணி மேலே இருக்கிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உதாரணத்துக்கு சென்னை 3வது இடத்திலும், மும்பை 4வது இடத்திலும் இருந்து போட்டி டிராவாகி சூப்பர் ஓவர் வீச முடியவில்லை என்றால் சென்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
Recommended Video

டி.ஆர்.எஸ்
ஐபிஎல் போட்டியின் முடிவை மாற்றுவது நடுவர்களின் தவறான முடிவு தான். இதனை தடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டியில் இனி ஒரு டி.ஆர்.எஸ்க்கு பதிலாக இனி 2 டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படடுள்ளது. இதன் மூலம் நடுவரின் தவறான முடிவை திருத்த முடியும். தோனி போன்ற கேப்டன்களுக்கு இந்த முடிவு கைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications











