கொழும்பு: இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பவுலிங் செய்ய ஓடிவரும்போதே, இவர் என்ன ஓட்டப் பந்தயத்திலா கலந்து கொள்கிறார் என்று கேட்கும் அளவுக்கு அவருடைய வேகம் இருக்கும். அதைவிட வேகமாக அவருடைய கையில் இருந்து பந்து வரும்.
உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளையும் மிரள வைத்த லசித் மலிங்காவின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது. இந்தியாவுடனான தொடருக்குப் பிறகு, அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை.