ஆக்லாந்து: முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் க்ரோவின் இறுதிச் சடங்கு ஆல்லாந்தில் இன்று நடைபெற்றது.
முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் க்ரோ புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி உயிர் இழந்தார். 53 வயதில் இறந்த மார்ட்டின் நியூசிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனாக இன்றும் கருதப்படுபவர்.

மார்ட்டினின் இறுதிச் சடங்கு ஆக்லாந்தில் உள்ள ட்ரினிட்டி தேவாலயத்தில் இன்று நடைபெற்றது. இறுதிச் சடங்கில் மார்ட்டினின் குடும்பத்தார், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவரது சவப்பெட்டியை அவரின் சகோதரரும், ஹாலிவுட் நடிகருமான ரஸ்ஸல் க்ரோ மற்றவர்களுடன் சேர்ந்து சுமந்து வந்தார். இறுதிச் சடங்கின்போது மார்ட்டினின் மனைவி லொரைன் டவுன்ஸ் கூறுகையில்,
புற்றுநோய் தாக்கியபோதும் அவர் அஞ்சாமல் தைரியமாக இருந்தார். அவர் அன்பான கணவர், நல்ல தந்தை என்று கண்கள் கலங்க தெரிவித்தார்.