
மெல்போர்ன் : அல்-ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில், இந்தியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆடிய ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் (Spot Fixing) ஈடுபட்டதாக கூறப்பட்து உள்ளது. இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் இதே குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.
குறைந்த ரன் ரேட்டில் ரன்களை எடுக்குமாறு அந்த வீரர்களிடம் பிக்ஸிங் செய்பவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. நேரடியாக வீரர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த ஆவணப்படத்தில் எந்த நேரத்தில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் குற்றம் நடந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
