
போட்டி எப்படி
இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஆட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, விஹாரி, ராகுல், பும்ரா ஆகிய நான்கு பேர் அடுத்த போட்டியில் ஆட மாட்டார்கள். ஏற்கனவே காயத்தால் இஷாந்த், புவனேஷ்வர் குமார், ஷமி, உமேஷ் ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை.

மயங்க்
இதனால் அடுத்த போட்டியில் விஹாரிக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணிக்குள் வருவார் என்று கூறப்பட்டது. மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவார்கள். சுப்மான் கில் மிடில் ஆர்டரில் ஆடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

காயம்
பயிற்சியின் போதே மயங்க் அகர்வாலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஸ்கேன் தற்போது எடுக்கப்பட உள்ளது. இதில் முடிவு அவருக்கு எதிராக வந்தால் மயங்க் அகர்வாலும் அடுத்த போட்டியில் ஆட மாட்டார். இவரும் ஆட முடியாமல் போனால் எப்போதும் போல சுப்மான் கில் - ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

யார்
அதேபோல் அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்படுவார். அவர் ஒன் டவுன் இறங்குவார் என்று கூறுகிறது. இந்திய அணியில் முக்கியமான பல வீரர்கள் காயம் அடைந்துவிட்டனர். இதனால் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.


Click it and Unblock the Notifications