
சென்னை
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் மோசமாக ஆடினார். வாய்ப்பு கிடைத்த போட்டியில் எல்லாம் சொதப்பினார்.

டெஸ்ட்
கடந்த 2019ம் வருடம் நடந்த டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் மிகவும் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார். அதன்பின் ஐபிஎல் 2020 தொடரிலும் சிறப்பாக ஆடினார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வால் சரியாக ஆடவில்லை.

ஓப்பனிங்
ஓப்பனிங் இறங்கியும் இவர் நம்பிக்கை அளிக்கவில்லை. மிடில் ஆர்டரிலும் நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். சென்னையில் தற்போது வலைப்பயிற்சியில் மயங்க் அகர்வால் ஈடுபட்டு வருகிறார்.

வலைப்பயிற்சி
ஆனால் வலைப்பயிற்சியிலும் இவர் சிறப்பாக ஆடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோலி இவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டாம், 5 பவுலர்களை களமிறக்கலாம் என்ற முடிவில் கோலி இருக்கிறார்.

ஓய்வு அவசியம்
மயங்க் அகர்வால் பார்மில் இல்லை. அவருக்கு ஓய்வு அவசியம். ஓய்வு எடுத்தால் அவர் பார்மிற்கு திரும்ப வாய்ப்புள்ளது. அதனால் இப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று கோலி முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications