
ஏலம்
கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஃபின்ச், 12 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 268 ரன்களை எடுத்துள்ளார். இந்தாண்டு ஆர்.சி.பி அணியால் கழட்டி விடப்பட்டார். ஆனால் அவரை ஏலத்திலும் எந்த அணியும் கண்டுக்கொள்ளவில்லை.

கௌரவம்
கடந்த ஆண்டு பிக்பேஷ் தொடரிலும் ஃபின்ச் பெரிய அளவில் சோபிக்க வில்லை.. 13 போட்டிகளில் ஆடிய அவர் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு இடையேயான டி20 போட்டிக்கு ஃபின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளார்க்
இது குறித்து பேசியுள்ள கிளார், ஃபின்ச்-ஐ ஏலம் எடுக்காமல் போன ஐபிஎல் அணிகளின் முடிவு தவறா? அல்லது ஆஸ்திரேலிய டி20 அணி கேப்டனாக நியமித்த தேர்வர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனரா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சிறந்த வீரர்
ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன், ஐபிஎல்-ல் ஆட தகுதியில்லாதவர் என்று கூறாதீர்கள். இவ்வளவு பெரிய தொடரில் இத்தனை அணிகள் இருந்தும் அவர் கண்டுக்கொள்ளப்படாமல் போயிருந்துள்ளார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என கிளார்க் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











