பிர்மிங்காம்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து மோயின் அலி மற்றும் ஜேம்ஸ் போர்டர் விடுவிக்கப்பட்டனர். டி-20 பிளாஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாட உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. முதல் டெஸ்ட் பிர்மிங்காமில் நேற்று துவங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து முதல் நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மோயின் அலி மற்றும் ஜேம்ஸ் போர்டர் இடம்பெற்றிருந்தனர். விளையாடும் 11 பேரில் அவர்கள் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், இங்கிலாந்தில் டி-20 பிளாஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வோர்சஸ்டர்ஷையர் அணியில் மோயின் அலியும், எசக்ஸ் அணியில் போர்டரும் இடம்பெற்றுள்ளனர்.
டி-20 பிளாஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, அவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.