For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்ளோ பெரிய பிளேயரா இருந்தாலும் இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்.. தோனி விவகாரம்.. விளாசிய அசாருதீன்!

ஹைதராபாத் : முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன், தோனியை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்வது பற்றி கருத்து கூறி உள்ளார்.

Recommended Video

Azharuddin insists Dhoni can’t get chance without match practice

இந்திய அணியில் இடம் பெறுவது பற்றி தோனியின் முடிவு என்ன என்பதை அவர் தான் கூற வேண்டும் என கூறி இருக்கிறார் அசாருதீன்.

மேலும், எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் அணிக்கு வருவதாக இருந்தால் சில போட்டிகளில் ஆடி பயிற்சி செய்த பின் தான் வர முடியும் என தோனியை விளாசி உள்ளார்.

ஐபிஎல் தள்ளி வைப்பு

ஐபிஎல் தள்ளி வைப்பு

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுவதால், ஐபிஎல் தொடர் நடப்பதிலும் சிக்கல் உள்ளது. அது தோனிக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடர் முதல் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் தாமாகவே விலகி இருப்பதாக கூறப்பட்டது. எனினும், அவர் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட முயற்சி செய்வதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறியது.

ஐபிஎல் பயிற்சி

ஐபிஎல் பயிற்சி

அது உண்மை தான் என்பது போல 2020 ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபிக்க அதிரடியாக தயார் ஆகி வந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அதிரடி பேட்டிங் பயிற்சி செய்து வந்தார். ஆனால், இடையே ஐபிஎல் தொடருக்கு கொரோனா வைரஸால் சிக்கல் எழுந்துள்ளது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்த நிலையில், ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு வர வாய்ப்பு இல்லை என பலரும் கூறி வருகிறார்கள். அது பற்றி அசாருதீன் தன் கருத்தை கூறி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் ஆடி பயிற்சி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

தனிப்பட்ட முடிவு

தனிப்பட்ட முடிவு

"அவருக்கு என்ன வேண்டும் என்பதை என்னை விட தோனி தான் விளக்கமாக கூற முடியும். அது அவரது தனிப்பட்ட முடிவு, இப்போது பார்த்தால், நிலைமை அந்த அளவுக்கு சரியாக இல்லை. அதனால், தான் ஐபிஎல் தொடர் கூட நடக்கவில்லை" என்றார் அசாருதீன்.

சிறிது காலம் ஆகலாம்

சிறிது காலம் ஆகலாம்

"அனைத்து விஷயங்களும் சரியான அளவில் நடக்க சிறிது காலம் ஆகலாம். ஆனால், தோனியைப் பொறுத்தவரை அது அது அவரின் தனிப்பட்ட முடிவு" என ஐபிஎல் தொடர் நடப்பது மற்றும் தோனி இந்திய அணிக்கு ஆட விரும்புவது பற்றி பேசினார் அசாருதீன்.

பயிற்சி அவசியம்

பயிற்சி அவசியம்

"தேர்வுக் குழு நிச்சயம் அவரின் செயல்பாட்டை கவனிக்கும். ஏனெனில், நீண்ட இடைவெளிக்கு பின் ஆடுவது அத்தனை எளிதல்ல. மேட்ச்களில் ஆடிய பயிற்சி அவசியம் தேவை. நீங்கள் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும், சில போட்டிகளில் நீங்கள் ஆடித் தான் ஆக வேண்டும்." என்றார் அசாருதீன்.

அணிக்கு திரும்புவது கடினம்

அணிக்கு திரும்புவது கடினம்

தோனி எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் ஐபிஎல் அல்லது உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபித்தால் தான் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்பதையே இவ்வாறு கூறி உள்ளார் அசாருதீன். எனவே, ஐபிஎல் தொடர் நடக்கவிட்டால், தோனி அணிக்கு திரும்புவது கடினம் என்றே கூறி உள்ளார்.

Story first published: Saturday, April 18, 2020, 11:55 [IST]
Other articles published on Apr 18, 2020
English summary
Mohammed Azharuddin insists Dhoni can’t get chance without match practice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+