
பேசி தீர்க்கலாம்
இந்த பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முகமது ஷமி முடிவெடுத்துள்ளார். மனைவி தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் இலங்கையில் இருந்து வந்த பின் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப்படுகிறது.

டோணி
முகமது ஷமி டோணியின் தலைமையின் கீழ்தான் இந்திய அணியில் சேர்ந்தார். 2013 ஜனவரி 6ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து இவர் டோணிக்கு விருப்பமான வீரர்களின் ஒருவராக இருக்கிறார்.

மிகவும் நல்லவர்
தற்போது ஷமி குறித்து டோணி பேசி இருக்கிறார். அதில் ''ஷமி மிகவும் நல்லவர். அவரை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும். அவரால் நாட்டிற்கும், அவரது மனைவிக்கும் எந்த துரோகமும் செய்ய முடியாது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

குடும்பம்
மேலும் ''இது அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை. இதை ஷமிதான் தீர்க்க வேண்டும். இதை பத்திரிக்கைகள் பெரிதுபடுத்த கூடாது. அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications












