
கொரோனாவிலும் லாபம்
கொரோனா காலக் கட்டத்திலும் , பார்வையாளர்கள் மைதானத்தில் இல்லாமலே அனைத்து அணிகளும் லாபத்தை ஈட்டியதாகவும், அதற்கு வீரர்களின் ஊதியத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டதே காரணம் என்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் ஐபிஎல்லின் மதிப்பு இரு மடங்காக உயரும் என்றும் ஃபோர்ப்ஸ் கணித்துள்ளது.

அதிகரிக்க வாய்ப்பு
10 அணிகள் பங்கேற்றுள்ளதால் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும் என்றும், அதனை பிசிசிஐ 10 அணிகளுக்கும் பிரித்து தருவதன் மூலம் அணிகளின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே 10 அணிகளின் பங்குகளை பல்வேறு நிறுவனம் போட்டி போட்டு வாங்குகிறது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மும்பை முதலிடம்
ஐபிஎல் 10 அணிகளின் அதிக விலை மதிப்பு கொண்ட பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 9962 கோடி ரூபாய் உடன் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே 8811 கோடி ரூபாயுடன் 2வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 8428 கோடி ருபாயுடன் 3வது இடத்திலும், லக்னோ அணி 8236 கோடியுடன் 4வது இடத்திலும் உள்ளது.

இத்தனை கோடியா?
டெல்லி அணி 7930 கோடியுடன் 5வது இடத்திலும், பெங்களூரு 7853 கோடியுடன் 6வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் அணி 7662 கோடியுடன் 7வது இடத்திலும், ஐதராபாத் அணி 7432 கோடியுடன் 8வது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் அணி 7087 கோடியுடன் 9வது இடத்திலும், குஜராத அணி 6512 கோடியுடன் 10வது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications