
இந்தியா ஏ சுற்றுப்பயணம்
"நான் அவருக்கு முன் அறிமுகமானேன். இந்தியா ஏ சுற்றுப்பயணத்தில் நாங்கள் ஒன்றாகச் சென்றோம், அங்கிருந்து நான் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுதான் முதன்முறையாக அவருடன் இணைந்து ஒரு போட்டியில் விளையாடினேன். நான் சிறப்பாக செயல்பட்டேன், தேர்வுக்குழுவினர் என்னை இந்திய அணிக்கு தேர்வு செய்தனர்.

பிராண்டாக மாறிவிட்டார்
அங்கிருந்து, இந்திய ஏ அணியின மற்றொரு பயணத்திற்குச் சென்றனர், அங்கு ஒருநாள் போட்டியில் தோனி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் விளாசினார். . மக்கள் எழுந்து நின்று அவரைப் போல் யாரும் இல்லை என்றார்கள். அவர் ஒரு சிறப்பு வீரர் என்றார்கள். இந்திய அணிக்கு வந்து என் இடத்தை உறுதி செய்வதற்குள் , தோனி ஒரு பிராண்டாக மாறிவிட்டார்.

வாய்ப்பை துரத்தினேன்
நான் வாய்ப்பை துரத்தினேன். நான் தொடர்ந்து உலகின் சிறந்த பேட்டர் ஆவதற்கான பாதையில் சென்றுகொண்டிருந்தேன். .ஆனால் தோனி எல்லா அணியிலும் செட்டிலாகிவிட்டார் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் சதம் பெற்றார். பின்னர் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குச் சென்று 85 ரன்கள் எடுத்தார்.

மக்கள் ஆதரவு
அவர் ஒரே இரவில் ஒரு பிராண்ட் ஆனார். மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆரம்பத்திலிருந்தே அவர் பெரியவராக இருந்தார். நான் அப்போது தான் பள்ளிப் படிப்பில் இருந்தேன்,அவர் பல்கலைக்கழகம் போல் இருந்தார். ஆனால் நான் எப்போதும் வாய்ப்புகளைத் தேடினேன், "என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











