CSK vs SRH: அந்த எளிமையாக பாருங்க.. மைதானத்திற்குள் வந்த தோனி.. ரசிகர்களுக்கு தந்த இன்ப அதிர்ச்சி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் கடைசி ஹோம் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான இந்தப் போட்டியில், கேப்டன் தோனி விளையாடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவரது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் களமிறங்கவில்லை. இதனை டாஸின்போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உறுதிப்படுத்தினார்.
தோனியின் வருகைக்காக ஏமாற்றத்துடன் இருந்த ரசிகர்களுக்கு, முதல் இன்னிங்ஸ் முடிவில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் குழு புகைப்படம் எடுத்து கொள்ள தோனி மைதானத்துக்குள் நுழைந்தபோது, சேப்பாக்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது. அவர் அணியினருடன் புகைப்படம் எடுத்துவிட்டு, ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் அமைதியாக அறைக்குத் திரும்பினார்.

ரசிகர்கள் தங்களின் மனம் கவர்ந்த வீரருக்கு அன்பான வாழ்த்துகளை பகிர்ந்தனர். இது தொடர்பாகஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழு புகைப்பட அமர்வுக்குப் பிறகு, எம்.எஸ். தோனி அமைதியாக தன் நாற்காலியை எடுத்துச் சென்றார்… 🥺💛 கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்த பிறகும் தலைவனின் அழகு இதுதான்; ஆடம்பரமற்ற, தூய எளிமை! 🙇♂️✨" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாகத் தொடங்கினார். நிதீஷ் குமார் ரெட்டி வீசிய முதல் ஓவரிலேயே 6, 4, 4 அடித்து 17 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஓவரிலும் பிரஃபுல் ஹிங்கே பந்தில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை விளாசி, எதிரணிக்கு ஆரம்பத்திலேயே அழுத்தம் கொடுத்தார்.
எனினும், மூன்றாவது ஓவரில் பாட் கம்மின்ஸ் தலையிட்டு, சாம்சனை வெளியேற்றினார். இஷான் கிஷன் எளிதாக கேட்ச் பிடித்தார். அடுத்து வந்த உர்வில் படேல் இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்தாலும், சாகிப் உசேன் பந்துவீச்சில் விரைவில் போல்ட் ஆனார்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா (19 பந்துகளில் 32 ரன்கள்) இணைந்து 42 ரன்கள் சேர்த்து, இன்னிங்ஸை நிலைப்படுத்தினர். கார்த்திக் தனது ஷாட் தேர்வு மூலம் ஈர்த்தாலும், கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட்டும் சிறிது நேரத்திலேயே வெளியேறினார்.
டேவால்ட் பிரேவிஸ் (27 பந்துகளில் 44 ரன்கள்) மற்றும் சிவம் துபே (26 ரன்கள்) ஐந்தாவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு உத்வேகம் அளித்தனர். பிரேவிஸ் சீராக விளையாடினாலும், ஈஷான் மலிங்கா பந்துவீச்சில் போல்ட் ஆனார். கடைசி நேரத்தில் முயற்சிகள் இருந்தபோதும், சென்னை 200 ரன்கள் இலக்கை எட்டத் தவறியது.


Click it and Unblock the Notifications
