ஒரே சமயத்தில்
இந்திய அணியில் டோணி, தினேஷ் கார்த்திக் இரண்டு பேரும் ஒன்றாகவே சேர்ந்தார்கள். 2004 செப்டம்பர் மாதம் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ந்தார். டிசம்பர் மாதம் டோணி அணியில் சேர்ந்தார். ஆனால் டோணிக்கு கிடைத்த பல வாய்ப்புகள் தினேஷுக்கு கிடைக்கவில்லை.
கேப்டன் வாய்ப்பு
டோணிக்கு முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு கேப்டன் வாய்ப்பு இருந்தது. இந்திய அணி கங்குலி, டிராவிட் இல்லாமல் கஷ்டப்பட்ட போது தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று கிரேக் சாப்பல் கூறியிருந்தார். ஆனால் கடைசியில் கேப்டன் வாய்ப்பு டோணிக்கு கிடைத்தது.
யார் பெரியவர்
இந்த நிலையில் முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு பின் டோணி பெரியவரா, தினேஷ் கார்த்திக் பெரியவரா என்ற விவாதம் எழுந்தது. அதற்கு தினேஷ் கார்த்திக் ''எப்போதும் டோணிதான் பெரியவர். என்னை அவருடன் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது'' என்றுள்ளார்.
ஹெட்மாஸ்டர்
மேலும் ''நான் படித்த பள்ளியில் அவர்தான் டாப்பர், அவர்தான் ஹெட் மாஸ்டர் என்று கூட சொல்லலாம். அவருக்கு என்னைவிட நிறைய அனுபவம் இருக்கிறது. கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்று அவரை பார்த்துதான் கற்றுக்கொண்டேன்'' என்றுள்ளார்.