மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது நீண்டகால நலத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற வீரர்களுக்கு நிதி வழங்குகிறது. ஜனவரி 02, 2026 அன்று வெளியாகிய தகவலின்படி, தோனி மாதம் ரூ.70,000 ஓய்வூதியமாகப் பெறுகிறார்.
2011ஆம் ஆண்டு இந்தியாவுக்கு உலகக் கோப்பைப் பட்டத்தைப் பெற்றுத் தந்த தோனி, 90 டெஸ்ட், 350 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் (ODI) மற்றும் 98 டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியவர். ஓய்வுபெற்ற டெஸ்ட் வீரர்களில், ஓய்வூதியம் ரூ.50,000-லிருந்து ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தோனியும் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களும் மாதம் ரூ.70,000 பெறுகின்றனர். முன்னாள் ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் ரூ.60,000 பெற, வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ.30,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் வீரர்களின் ஓய்வுக்குப் பிந்தைய நிதி நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.
கிரிக்கெட்டைத் தாண்டி, தோனி ஒரு வணிக சாம்பிராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.1,200 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராண்ட் பார்ட்னர்ஷிப், முதலீடுகள் மற்றும் ஆர்கானிக் விவசாயத்தில் அவரது ஆர்வம் ஆகியவை ஓய்வுக்குப் பிறகும் அவரை நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பிரபலங்களில் ஒருவராக நிலைநிறுத்துகின்றன.
தோனி, சச்சின் போன்ற வீரர்களுக்கு இது ஒரு பெரிய தொகையே இல்லை என்றாலும், இந்த தொகை வழங்கப்படுகிறது. இதே போன்று கோலி, ரோகித் போன்ற முன்னாள் கேப்டன்கள் டெஸ்ட், டி20யிலிருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதால், இந்த திட்டம், அவர்களுக்கு பொருந்தாது.