Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முழங்கால் காயத்தால் அவதி.. ஆர்சிபி அணிக்கு எதிராக தல தோனி களமிறங்குவாரா? காசி விஸ்வநாதன் விளக்கம்!

பெங்களூரு: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி களமிறங்க வாய்ப்பில்லை என்று தகவல் பற்றி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கேப்டன் தோனி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என்றும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் விரைவில் அணிக்கு திரும்புவார்கள் என்று கூறியுள்ளார்.

16வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் மும்பை மற்றும் லக்னோ அணிகளிடம் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் அணியிடம் சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

MS Dhoni will play against RCB in Bangalore says CSK CEO Kasi Viswanathan in IPL 2023

அதுமட்டுமல்லாமல் சென்னை அணியில் விளையாடும் வீரர்களை விட, காயத்தால் சிகிச்சை பெற்று வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஜேமிசன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிமர்ஜித் சிங் காயத்தால் களமிறங்கவில்லை. பின்னர் ஜேமிசனுக்கு மாற்று வீரராக வந்த மகாளா காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.

இதுமட்டுமல்லாமல் முன்னணி வீரர் தீபக் சஹர் 2 போட்டிகளில் கூட முழுமையாக ஆடாமல் காயமடைந்துள்ளார். அதேபோல் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு உதவுவார் என்று மினி ஏலத்தில் ரூ.16.25 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டோக்ஸ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இது போதாதென சிஎஸ்கே கேப்டன் தோனியும் முழங்காலில் காயத்தால் அவதியடைந்துள்ளார். இப்படி சிஎஸ்கே அணிக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் வீரர்களின் காயத்தால், பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 17ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் அடுத்த போட்டியில் களமிறங்காமல் ஓய்வெடுப்பது குறித்து தோனி இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதனால் ரசிகர்கள் கவலை கொள்ள தேவையில்லை.

MS Dhoni will play against RCB in Bangalore says CSK CEO Kasi Viswanathan in IPL 2023

அதேபோல் பென் ஸ்டோக்ஸ் இன்னும் 2 வாரங்களில் குணமடைந்துவிடுவார் என்று தெரிய வந்துள்ளது. அதனால் ஏப்ரல் 27ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலோ அல்லது ஏப்ரல் 30ஆம் நடக்கவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலோ களமிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் தீபக் சஹர் மே மாதம் முதல் வாரத்தில் குணமடைந்துவிடுவார். அதனால் சென்னை அணி ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 14, 2023, 9:47 [IST]
Other articles published on Apr 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+