என்ன நடந்தது?
ஆந்திரா மாநிலம், கடப்பாவில் நடந்த அண்டர் 16 காலிறுதிப் போட்டியில் உத்தர பிரதேச அணியை சந்தித்தது மும்பை அணி. இந்த போட்டிக்கு முன்னதாக ஹோட்டல் அறையில் சக வீரருடன் நடந்த சண்டையின் போது இந்த வீரர் தன் கால் சட்டையை வேண்டுமென்றே நழுவ விட்டுள்ளார்.
3 ஆண்டு தடை
இந்த ஒழுங்கீனமான செயலை செய்த அந்த வீரர் மீது மும்பை கிரிக்கெட் போர்டின் சார்பில் விசாரணை நடந்தது. அதன் முடிவில் அந்த வீரரை ஜனவரி 15 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
அறிக்கையில் சொன்னது என்ன?
அதன் விசாரணை அறிக்கையில், "இந்த சம்பவம் அணி சூழ்நிலையையும் விளையாட்டு வீரர்களின் அடிப்படை விதிகளையும், சக அணி வீரர்களுடனான ஆரோக்கிய போக்கையும் சிதைக்கும் வகையில் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.
அப்பீல் செய்ய உள்ள பெற்றோர்
அந்த இளம் வீரரின் பெற்றோர் கூறுகையில், ஒரு சிறுவனுக்கு மூன்று வருட தடை என்பது மிகவும் பெரிய தண்டனை. இந்த தண்டனைக்கு எதிராக நாங்கள் அப்பீல் செய்யப் போகிறோம் என கூறியுள்ளனர்.
இன்னும் நிறைய இருக்கு
அதே சமயம் மும்பை கிரிக்கெட் போர்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இந்த வீரர் மீது இது மட்டுமே ஒரே புகார் அல்ல. இதே போன்று, அதிக தண்டனைக்கு உரிய பல குற்றங்களை அவர் செய்துள்ளார்.
வாழ்நாள் தடை இல்லை
இந்த முறை கூட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டு பின்னர், ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கில் அது 3 வருடங்களாக குறைக்கபட்டதாக தெரிவித்தார்.