சென்னை: கிரிக்கெட் வீரர் முரளி விஜய்- நிகிதா தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது.
2012ல் நிகிதாவை திருமணம் செய்தார் முரளி விஜய். தம்பதிகளுக்கு நிவான் மற்றும் இவா ஆகிய மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், இப்போது மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அண்ணன் நிவான் கைகளில் தம்பியை ஏந்தியுள்ள புகைப்படத்தை முரளி விஜய் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரண்டு ராக் ஸ்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள முரளி விஜய், ஒருவர் இன்னொருவரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
Two Rockstars!! One introducing the other to the world 🌍. Feeling Blessed🙏. #grateful #lovetoall #moretolife pic.twitter.com/1dPJtSpcK9
— Murali Vijay (@mvj888) October 2, 2017
முரளி விஜய்-நிகிதா திருமணம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனவே இதுகுறித்து முரளி விஜயை விமர்சனம் செய்து டிவிட்டரில் நெட்டிசன்கள் பின்னூட்டம் இட்டுவருகிறார்கள். மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.