
திகார் சிறை
மேலும், சூதாட்ட புகார் தொடர்பாக, ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் சிறைக்குள் வைத்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சகோதரியின் கணவர் பேட்டி
இதுகுறித்து, மலையாள பத்திரிகை ஒன்றில் இன்று ஸ்ரீசாந்த் மைத்துனரும், பின்னணி பாடகருமான மது பாலகிருஷ்ணன் அளித்த பேட்டிவெளியாகியுள்ளது.அதில் இத்தகவலை அவர் கூறியுள்ளார்.

கொலை முயற்சி
மது பாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், "இரும்பில் உருவான கூரிய ஆயுதத்தால், சிறைக்குள் ஒரு ரவுடி ஸ்ரீசாந்த்தை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதிருஷ்டவசமாக ஸ்ரீசாந்த் உயிரோடு தப்பினார். இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு அளித்த புகாரின்பேரில், வேறு சிறைக்கு அந்த ரவுடி மாற்றம் செய்யப்பட்டார்.

ஐபிஎல் சூதாட்டத்தை மறைக்க முயற்சியா?
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான உண்மைகளை மறைக்க நடந்த கொலை முயற்சியா என்பது குறித்தோ, அல்லது அந்த ரவுடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றியோ எங்களுக்கு இதுவரை எதுவும் தெரியாது" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

சர்ச்சைக்கு சொந்தக்காரர்
இந்த பேட்டி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் உலக கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில், ஸ்ரீசாந்த்தும் இடம்பிடித்த பெருமைக்கு சொந்தக்காரர். கூடவே சர்ச்சைகளும் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











