
போட்டி முடியும் வரை
உலகக் கோப்பைத் தொடர் முடியும் வரை தாடி வளர்க்கப் போவதாக கூறுகிறார் ஜடேஜா. அதன் பின்னர்தான் அதை எடுப்பது குறித்து பரிசீலிக்கப் போகிறாராம்.

அடுத்தடுத்த வெற்றிக்கு இதுதான் காரணம்
இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பவுலிங்குக்குப் பின்னர் பேசிய ஜடேஜா, இந்த தாடியால்தான் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறோம் என்றார் சிரித்தபடி.

ஆமாய்யா.. அப்படித்தான் நடக்குது
அவர் சொல்வது உண்மையோ என்னவோ, உலகக் கோப்பைத் தொடரில் முதல் மூ்ன்று போட்டிகளிலும் கஷ்டமே இல்லாமல் ஜெயித்துள்ளது இந்தியா. இன்று மேற்கு இந்தியத் தீவுகளையும் தனது பந்து வீச்சால் சுருட்டிப் போட்டு விட்டது.

தாடி இல்லாம..ஸாரி பாஸ்!
ஜடேஜா மேலும் கூறுகையில் ராசி மட்டுமல்லா, தாடி இல்லாமல் எனது முகம் நன்றாக இருக்காது. அதுவும் கூட நான் தாடி வளர்க்க ஒரு காரணம் என்றார்...!
அதச் சொல்லு அய்யனாரே!


Click it and Unblock the Notifications