எந்த இடத்துல இறக்கினாலும்.. ஒரு கை பார்ப்போம்.. நம்பிக்கை பட்லர்
அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர், நேற்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 70 ரனகளை அடித்து அதிரடி காட்டினார்.
தற்போது 5வது இடத்தில் விளையாடிவரும் இவர், தான் எந்த இடத்தில் விளையாட கேட்கப்பட்டாலும் விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 126 ரன்கள் இலக்கை கொண்டு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லரின் 70 ரன்களே அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
நேற்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 126 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஒரு கட்டத்தில் தேங்கியது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஜோஸ் பட்லர் அடித்த 70 ரன்களே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தான் தற்போது அணியின் வேண்டுகோளுக்கிணங்க 5வது இடத்தில் விளையாடி வருவதாகவும் ஆனால் எந்த இடத்தில் விளையாட கேட்கப்பட்டாலும் தான் விளையாட தயாராக உள்ளதாகவும் பட்லர் தெரிவித்துள்ளார். ஸ்கோர் போர்ட் நெருக்கடி இல்லாமல் நம்மீது நம்பிக்கை வைத்து ஆடுவதும் முக்கியம் என்று பட்லர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications