
3வது நாள் போட்டி
ஆட்டத்தின் 3வது நாளான இன்றே இந்திய அணி வெற்றியை பதிவு செய்யும் என்ற கருத்துகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று தான் பெரிய திருப்பத்தையே பிட்ச் கொடுக்கவுள்ளது. அதாவது 2வது நாளின் போது எப்படி இருந்ததோ அதே போலதான் 3வது நாளின் போது தான் பேட்டர்களுக்கு நன்கு உதவி செய்யக்கூடிய வகையில் பிட்ச் இருக்கும். எனினும் அது புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு கிடையாது.

பிட்ச்-ன் நிலைமை
புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் பிட்ச்-ல் ஏற்படும் சுழலை சமாளிப்பது சற்று கடினமாகும். ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் நேற்றைய கடைசி செஷனில் இருந்து நிதானமாக செட்டில் ஆகி விளையாடி வருகின்றனர். ஒருபுறம் ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இவர்கள் இன்று நின்று ஆடினால் மட்டுமே நல்லதாகும்.

15 ஓவர்கள் தான்
இன்று காலை செஷனில் 10 - 15 ஓவர்களுக்குள் ரவீந்திர ஜடேஜா - அக்ஷர் பட்டேல் பார்ட்னர்ஷிப்பை பிரித்துவிட்டால், பின்னர் இன்றைய நாள் முழுவதும் ஆஸ்திரேலியா அதிக ரன்களை குவிக்கலாம். அதுவும் அதிரடியாகவே ரன்களை சேர்க்கலாம். எனவே ஓரளவிற்கு இன்று முன்னிலை பெற்றுவிட்டால் 4 மற்றும் 5வது நாட்களில் இந்தியா அதனை விரட்டுவது கடினம்.

சதமடித்துவிட்டால்?
ஒருவேளை ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் நிலைத்து நின்று 400 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் டிக்ளர் செய்துவிடுவார்கள். அதன்பின்னர் 4வது மற்றும் 5வது நாட்களில் இந்தியாவின் ஸ்கோரை விரட்டுவதற்கே ஆஸ்திரேலிய அணி திணறிவிடும். இதனால் இன்றைய போட்டியில் மிகப்பெரிய விருந்து ரசிகர்களுக்கு காத்துள்ளது.


Click it and Unblock the Notifications











