|
ரசிகர் பல்டி
ஓடி வந்த வேகத்தில் நேராக பிட்சுக்குள் சென்றார். அங்கேயே பல்டியடித்த அந்த ரசிகர் தமது சேட்டைகள் மூலம் கவனத்தை ஈர்த்தார். ஒரு கட்டத்தில் மைதானத்தில் யாரின் பிடியிலும் அகப்படாமல் வலம் வந்தார். அவரின் செய்கையால் போட்டி திடீரென நிறுத்தப்பட்டது.
வீரர்கள் முழிப்பு
மைதானத்தில் இருந்த இரு அணிகளின் வீரர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். ரசிகரின் இந்த செயலால், அரங்கில் இருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.
டிமிக்கி கொடுத்த ரசிகர்
மைதானத்துக்குள் வலம் வந்த அவரை பாதுகாவலர்கள் பிடிக்க முனைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் சிக்காத அந்த ரசிகர் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடினார். ஆனாலும், அவரை பின் தொடர்ந்து பாதுகாவலர்கள் சென்றனர்.
வைரலான வீடியோ
ஒரு வழியாக, பின்னாலேயே துரத்திச் சென்ற பாதுகாவலர்கள், வளையம் போன்று சுற்றி நின்று அவரை பிடித்துச் சென்றனர். பின்னர் மைதானத்தில் இருந்து அவர் அகற்றப்பட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.