
லண்டன்: இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசேன் இந்திய வீரர்கள் டெஸ்ட் தொடரில் தடுமாறி வருவதையடுத்து, தற்போது ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் தான் போட்டி (men against boys) என கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் 0-4 என டெஸ்ட் தொடரை இழந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய அணியை மொத்தமாக “வைட்வாஷ்” செய்ய வேண்டும் என கூறியுள்ளார் ஹுசைன்.
