பிர்மிங்காம் : இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் விராத் கோஹ்லி பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டாலும், கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதனால், இந்திய அணியின் தோல்விக்கு கோஹ்லி, ஒரு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது. விராட் கோஹ்லி 149 மற்றும் 51 ரன்கள் குவித்தார். அவர் தவிர, மற்ற எந்த இந்திய வீரரும் குறைந்தபட்சம் நாற்பது ரன்கள் கூட எடுக்கவில்லை. பந்துவீச்சாளர்களில், அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை எடுத்தனர்.
