பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடுவதன்மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பௌலர் நாதன் லியோன் விளையாடவுள்ளார்.
மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய இன்னும் 4 விக்கெட்டுகளே உள்ள நிலையில், இந்த போட்டியில் அவர் அதை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பௌலர் நாதன் லியோன் ஆடவுள்ளார்.
மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய இன்னும் 4 விக்கெட்டுகளே உள்ளது. இந்த 4 விக்கெட்டுகளை இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் வீழ்த்தி அவர் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.