
விஜய் ஷங்கர் இடம் பெற்றார்
தவான் காயமடைந்த நிலையில், மிடில் ஆர்டரில் இறங்கிய ராகுல் துவக்க வீரராக மாறினார். மிடில் ஆர்டரில் களமிறங்க விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியில் அவர் பங்கேற்றார்.

ரசிகர்கள் கோபம்
இந்த நிலையில், தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் அவர் பங்கேற்ற நிலையில், ரிஷப் பண்ட் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர். ரிஷப் பண்ட் காயமடைந்த தவானுக்கு மாற்று வீரராக உத்தேச அணியில் 15 வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டார்.

ஏன் கோபம்?
ஆனால், களமிறங்கும் அணியில் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு கிடைக்காத வாய்ப்பு, விஜய் சரியாக தன்னை நிரூபிக்காத விஜய் ஷங்கருக்கு கிடைத்து வருகிறது என்பதே அந்த ரசிகர்களின் கோபத்துக்கு முக்கிய காரணம்.

2 போட்டிகள் மட்டுமே
விஜய் ஷங்கர் உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளார். அதில் 15* மற்றும் 29 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீச்சிலும் கலக்கினார். புவனேஸ்வர் குமார் காயமடைந்த நிலையில், அவர் இடத்தை நிரப்பி பந்துவீச்சில் கைகொடுத்தார்.

வாய்ப்பு கொடுக்க வேண்டும்
விஜய் ஷங்கர் உண்மையில் ரிஷப் பண்ட்டை விட பயனுள்ள வீரர் என்பதை பாகிஸ்தான் போட்டியில் நிரூபித்தார். அவசர சூழ்நிலையில், ஒரு முக்கிய பபந்துவீச்சாளரை இந்தியா இழந்த போது அணிக்கு கைகொடுத்தார். அவரது பேட்டிங் தற்போது சராசரியாக உள்ளது. ஆனால், ஏதோ ஒரு போட்டியில் அடித்து ஆடும் ரிஷப் பண்ட்டை விட நல்ல நிலையில் தான் உள்ளது. அவருக்கு இன்னும் ஒரீரு போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.


Click it and Unblock the Notifications











