For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை பார்த்து ஊரே சிரிக்குது... மனமுடைந்து கலங்கினார் நெஹ்ரா

நெஹ்ரா தன்னுடைய கிரிக்கெட் கமெண்டரி வேலை குறித்து வருத்தமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

By Shyamsundar

கொல்கத்தா: இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நெஹ்ரா தற்போது கிரிக்கெட் கமெண்டரி பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது கிரிக்கெட் கமெண்டரியில் ஈடுபடுவதால் உண்டாகும் கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா இந்திய அணியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். நவம்பர் 1ம் தேதி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியே அவர் விளையாடிய கடைசி போட்டியாகும். ஓய்வுக்கு பின் அவர் என்ன செய்வார் பலரும் தங்களது யுகங்களை தெரிவித்து வந்தனர்.

Nehra speaks about his commentary box experience

இந்த நிலையில் அவர் தற்போது நடக்கும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கமெண்டரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

அதில் அவர் ''காலையில் நான் கோட் போட்டுக் கொண்டு வந்ததை பார்த்த பலர் சிரித்தனர். ரசிகர்கள் பலர் மோசமாக கத்தினர். இந்திய அணியில் கூட என்னை பார்த்து சிலர் சிரித்தனர். என் வேலைக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லை. மத்தபடி இந்த வேலை இயல்பாக செல்கிறது'' என்று கூறினார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நெஹ்ராவையே கலங்கடித்துவிட்டதாக பலரும் சோசியல் மீடியாக்களில் எழுதி வருகின்றனர். நெஹ்ரா ''எப்போதும் போல கமெண்டரி செய்வேன், வேலையை விட மாட்டேன்'' என்றும் கூறியிருக்கிறார்.

Story first published: Friday, November 17, 2017, 17:09 [IST]
Other articles published on Nov 17, 2017
English summary
Nehra speaks about his commentary box experience. He says everybody had a laugh about his new role.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X