“அந்த மனசு தான் சார் கடவுள்”.. நேபால் வீரர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. கொண்டாடும் ரசிகர்கள்!
ஓமன்: நேபால் கிரிக்கெட் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர், நியாயத்தின் அடிப்படையில் செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன.
இதற்கு பயிற்சி பெறும் வகையில் நேபால் மற்றும் அயர்லாந்து அணிகள் டி20 போட்டிகளில் மோதி வருகின்றன.

நேபால் - அயர்லாந்து போட்டி
ஓமனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தது. ஆனால் 19வது ஓவரில் நடந்த ஒரு சம்பவம் ஆட்டத்தின் வெற்றி தோல்வியையே மாற்றி அமைத்தது. நேபால் பவுலர் கமல் சிங் வீசிய அந்த ஓவரில் பேட்ஸ்மேன் மார்க் அடைய்ர் மிட் விக்கெட் மீது தூக்கி அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பெரியளவில் தூரம் செல்லவில்லை.

பரபரப்பு ஓட்டம்
இதனையடுத்து நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த ஆண்டி மெக்ப்ரேன் சிங்கிள் எடுக்க ஓடுகிறார். அதே சமயத்தில் அருகாமையிலேயே விழுந்திருந்த பந்தை எடுத்து ரன் அவுட்டாக்க பவுலர் கமல் முற்பட்டு, பந்தை எடுத்து விக்கர் கீப்பர் ஆசிஃப் ஷேய்க்கிடம் வீசிவிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மீது பேட்ஸ்மேன் மோதி கீழே விழுந்தார்.
நெகிழ்ச்சி வீடியோ
விக்கெட் கீப்பர் பந்து கைக்கு கிடைத்தவுடன் சுலபமாக அவரை அவுட்டாக்க ஸ்டம்ப் வரை சென்று கடைசியில் வேண்டுமென்றே அவுட்டாக்கவில்லை. பேட்ஸ்மேன் கீழே விழுந்ததை வைத்து விக்கெட் எடுக்க முயற்சிப்பது நியாயம் இல்லை என நினைத்து அவர் இதனை செய்துள்ளார். இது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

அணியின் தோல்வி
அந்த போட்டியில் நேபால் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் ஆசிஃப் செய்த அந்த விஷயத்தால் அனைவரின் கவனமும், பாராட்டும் நேபால் அணிக்கு தான் குவிந்து வருகின்றன. இதுபோன்ற ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தான் அனைவருக்கும் வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications