கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரருக்கும் இந்திய வீரர் ஷமிக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லாவின் மோசமான செயலுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தது. மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டி தற்போது டிராவில் முடிந்து இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி தோற்கும் நிலைமையில் இருந்தது. ஆனால் இலங்கை வீரர்கள் வெற்றியை பற்றி சிந்திக்காமல் எப்படியாவது போட்டியை டிரா செய்யும் நோக்கில் விளையாடினார்.
இதையடுத்து இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லா நேரத்தை கடத்துவதற்காக பேட்டிங் பிடிக்காமல் நின்று கொண்டு இருந்தார். மேலும் பந்து போட பாதி தூரம் வந்த பின் பேட்டிங் பிடிக்காமல் பின் வாங்கினார். இதனால் பந்து போட வந்த ஷமி கோவத்தின் உச்சத்திற்கு சென்றார்.

இதைப்பார்த்து கோஹ்லியும் டென்சன் ஆனார். அடுத்த பந்தை போட்டுவிட்டு ஷமி நேராக அந்த வீரரிடம் மல்லுக்கு சென்றுவிட்டார். அதன்பின் நடுவர் வந்த சமாதானம் செய்து வைத்தார்.
நேரத்தை கடத்தி போட்டியை டிரா செய்ய இலங்கை அணி செய்த இந்த கீழ்த்தரமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.