மும்பை : டி20 உலக கோப்பை குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடத்தப்பட டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக வரும் செப்டம்பர் 30 வரை தன்னுடைய எல்லைகளை மூடுவதாக என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் வரை கால அவகாசம் உள்ளதால் தற்போது அதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
