
ஓப்பனிங்
கடந்த ஆண்டு 14 டி20 போட்டிகளில் விளையாடி 589 ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் மற்றும் 1326 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் அணியின் ஓப்பனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
முதல் விக்கெட்டிற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அணியின் கேப்டனாகவும் இவரே தேர்வாகியுள்ளார். பாபரை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்கரம், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து இடங்களில் இருக்கின்றனர். பினிஷர் பணிக்காக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சு படை
சுழற்பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் ஷாம்ஸி மற்றும் இலங்கையின் வாண்டு ஹசரங்காவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட், வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரீடி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Recommended Video

ரசிகர்கள் அதிருப்தி
ஐசிசியின் இந்த ப்ளேயிங் 11ல் பாகிஸ்தானை சேர்ந்த 3 வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக விராட் கோலியின் பெயர் கூட இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணிக்கே இது அவமானம் என ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











