மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், இந்திய அணி கேப்டன் யார் என்ற விவாதம் தேவையில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட களமிறங்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி உருவாக்கப்பட்டது.
