
இந்திய அணி
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , இந்திய அணி முதல் டெஸ்டில் மிக மோசமாக தோல்வி அடைந்தது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும். மன ரீதியாக இந்திய அணியை இது பாதித்து இருக்கும். இதில் இருந்து இந்தியா மீள்வது கடினம்.

ரிக்கி பாண்டிங்
இந்திய அணிக்கு இது மிகப்பெரிய வலியை, காயத்தை கொடுத்து இருக்கும். 36 ரன்களில் அவுட் ஆவது என்பது வலி மிகுந்த விஷயம். இந்திய அணி இந்த தொடரில் கிளீன் வாஷ் அவுட் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது.

மீண்டும் வருமா
இந்தியா இனி மீண்டு வந்து ஆடுவது மிகவும் கடினம். இந்தியா அவ்வளவு எளிதாக இனி நடக்கும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது. இந்திய அணியில் வேறு தற்போது கோலி இல்லை.

கோலி இல்லை
கோலி இல்லாமல் மீதம் இருக்கும் வீரர்கள் ஆடி வெற்றிபெறுவது கடினம். இந்திய அணியில் தற்போது அணியை காப்பாற்ற கூடிய வீரர்கள் என்று யாருமே இல்லை. இந்தியாவை காப்பாற்ற போகும் வீரர் என்று யாரையும் கூற முடியாது, என்று ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications