ப்ளீஸ்... உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கும்னு சொல்லாதீங்க... நொந்து நூடுல்ஸ் ஆன கோலி
Recommended Video

மும்பை:இந்தியா தான் உலக கோப்பையை வெல்லும் அணி என்று இப்போதே கூற வேண்டாம் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான்.. 2019ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை அணிகளில் அனைவருக்கும் பிடித்த அணிகளாக உள்ளன. அதனால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
ஆனால்... ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், மொத்தமாக தொடரை இந்திய அணி இழந்துள்ளது. அதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களும் உலக கோப்பை குறித்து கவலைப் பட தொடங்கி உள்ளனர்.

ஐசிசி வரிசையில் முதலிடம்
ஆனாலும், இந்திய அணி தான் கோப்பையை தட்டிச் செல்லும் என்று கூறி வருகின்றனர். இந்தியா, இங்கிலாந்து அணிகள் தற்போது ஐசிசி உலக தர வரிசையில் 2 மற்றும் முதல் முதலிடம் வகிக்கின்றன.

இந்தியா வெல்லுமா?
இந் நிலையில்.... இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று இப்போதே கூற வேண்டாம் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெரும் அச்சுறுத்தல்
உலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வகையில் பெரும் அச்சுறுத்தலாக தான் உள்ளது. ஒரே வகையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எந்த அணியையும் அரை இறுதிக்குள் தட்டிச் செல்ல முடியும்.

தற்போதைய சூழல்
அவர்கள் ஒரு குறிப்பிட்ட போட்டியில் தோற்கடிக்கப்படலாம். அதுதான் தற்போது உள்ள சூழ்நிலை.

கணிக்கமுடியாத போட்டி
நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை எந்த அணியை வெல்லலாம். ஆனால், 2019ம் ஆண்டு உலக கோப்பை, ஒவ்வொரு ஆண்டும், இறுதி போட்டி வரை கணிக்க முடியாத ஒன்று.

எந்த அணியும் ஆபத்தானது
உலக கோப்பை தொடரில் எந்த அணியும் ஆபத்தானது. மேற்கிந்திய தீவுகள் அச்சுறுத்தலான அணியாக இருப்பார்கள். இங்கிலாந்து மிகவும் வலுவான உள்ளது.

தோற்கடிக்க முடியும்
ஆஸ்திரேலியா சமநிலையில் இருக்கிறது, நாங்களும் ஒரு பக்கம் வலுவாக இருக்கிறோம், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்று கோலி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications