
4 போட்டிகள்... டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. வரும் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியுடன் இந்த தொடர் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி அதையடுத்து தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்புகிறார்.

3 போட்டிகளின் கேப்டன்
அவருக்கு பதிலாக துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளில் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த போட்டிகளை சமாளிக்க அதிகப்படியான நெருக்கடி இருக்காது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரஹானே வெற்றி
இந்த போட்டிகளில் ஸ்டாண்ட் -இன் கேப்டனாக மட்டுமே ரஹானே செயல்படவுள்ளதால் அவருக்கு நெருக்கடி அதிகமாக இருக்காது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று இரண்டிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதையும் கவாஸ்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.

புஜாரா குறித்து கவாஸ்கர் பாராட்டு
அதனால் தன்னுடைய பொறுப்பை சரியாக அவர் மேற்கொண்டு விளையாடுவார் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் புஜாராவையும் சிறப்பாக பயன்படுத்தி விளையாட வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் அவர் மனதளவில் மிகவும் வலிமையானவர் என்றும் சிறப்பாக போட்டிகளை எதிர்கொள்வார் என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











