உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள்
மும்பை: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் குவிய ஆரம்பித்துள்ளன. கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு தலா ரூ. 1கோடி பரிசளித்துள்ளது. இதுபோல டெல்லி அரசு, உத்தரகாண்ட் அரசு ஆகியவையும் பரிசுகளை அறிவித்துள்ளன.

உலகக் கோ்பைபப் போட்டியிந் இறுதியாட்டம் முடிந்த சில விநாடிகளிலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பரிசு குறித்த அறிவிப்பை ரவி சாஸ்திரி மூலம் வெளியிட்டது.
அதன்படி வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும் என வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்தார். அதேபோல அணி பயிற்சியாளர் கிர்ஸ்டன், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும். அணித் தேர்வாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
டோணிக்கு டெல்லி அரசு ரூ. 2 கோடி
அதேபோல டெல்லி அரசும் பரிசுகளை அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு ரூ. 2 கோடி பரிசாக அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதேபோல டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக், விராத் கோலி, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும்.
டோணி, சச்சினுக்கு முசெளரியில் வீடு
உத்தரகாண்ட் மாநிலம் விருதுகளையும், பரிசையும் அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு உத்தரகாண்ட் ரத்னா விருதை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதேபோல டோணிக்கும், சச்சினுக்கும் முசெளரியில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூசுப் பதான், முனாபுக்கு விருது
அதேபோல குஜராத் அரசும் தன் பங்குக்கு இரு வீரர்களுக்கு விருது அறிவித்துள்ளது. யூசுப் பதானுக்கும், முனாப் படேலுக்கும் ஏகலவ்யா விருது அளிக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
Story first published: Thursday, June 7, 2012, 12:22 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications