ஆண்டு இறுதியில் திட்டம்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், அதை மீண்டும் நடத்த பல்வேறு நாடுகளும் திடடமிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ல் 9 சான்ஸ் உள்ளது
இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கு 10ல் 9 சான்ஸ் உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி அவதிக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் மூலம் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அந்த அணிக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
10க்கு 9 சான்ஸ்
வரும் அக்டோபர் முதல் ஜனவரி 2021க்குள் இந்த தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் சுற்றுப்பயணம் நடைபெற 10க்கு 9 சான்ஸ் உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் 10க்கு 10 என்று கூறமுடியாத சூழலில் தான் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம்
இதேபோல இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த சுற்றுப்பயணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.