பெங்களூரு : ஆசிய கோப்பை போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறும் முதலாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேச அணியை ஏதிர் கொள்கிறது.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னணி வீரர் தனுஷ்கா குணதிலகா முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவர் 6 மாதம் தடையில் இருந்து தற்போதுதான் அணிக்கு மீண்டும் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக ஸ்நேஹன் ஜெயசூரியா அணியில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
