
பேட்டிங் அணியே வெற்றி
5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக முதலில் பேட்டிங் தேர்வு செய்யும் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

வெற்றி பெற முற்படும்
இந்நிலையில் போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறி இருப்பதாவது: இந்திய அணி ஒரு வெற்றிகரமான அணி. எப்படி இருந்தாலும், ஒரு அணி, மற்ற அணியை ஜெயிக்கவே முற்படும். அதற்கான போராட்டங்களில் இறங்கும்.

கவனமாக இருக்கிறோம்
அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கு தான் வெற்றி. அரையிறுதியில் வந்துள்ள 4 அணிகளுமே சிறப்பான அணிகள். திறமையான அணிகள். சில போட்டிகளில் தோற்றிருந்தாலும், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.

விக். வீழ்த்த திட்டம்
குறிப்பாக, அந்த அணியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எங்களுக்கு அது பற்றி கவலை இல்லை இது ஒரு போட்டி.. அவ்வளவே. யார், யார் எல்லாம் விளையாடுகிறார்கள் என்பதை பார்க்காமல் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே திட்டம். அதனால் ரோகித் சர்மாவின் சாதனைகளை மறந்து, அவரை விரைவில் வேகப் பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி விடுவார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications