பெங்களூரு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணித் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
டோணி தலைமையிலான இந்த அணியில் யார் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு விறுவிறுப்பாகியுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதில் ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்கள் இடம் பெறவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 15 பேர் கொண்ட இறுதி அணி நாளை தேர்வாகவுள்ளது. மும்பையில் இத்தேர்வு நடைபெறுகிறது.

சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இந்த 15 வீரர்களையும் தேர்வு செய்து அறிவிக்கவுள்ளனர். இதில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற யூகங்கள் கச்சைக் கட்டிப் பறந்து வருகின்றன.
நாளை அவர்கள் அறிவிக்கும் அணி இருக்கட்டும்.. இது ஒன்இந்தியாவின் உத்தேச அணி.. நம்ம தேர்வு சரியா இருக்கான்னு பாருங்க....
பேட்ஸ்மேன்:
விராத் கோஹ்லி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, முரளி விஜய்
விக்கெட் கீப்பர்:
எம்.எஸ்.டோணி (கேப்டன்)
ஆல் ரவுண்டர்கள்:
ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல்.
வேகப் பந்து வீச்சாளர்கள்:
இஷாந்த் சர்மா, புவனேஸ் குமார், முகம்மது சமி, உமேஷ் யாதவ்.
சுழற்பந்து வீச்சாளர்:
ஆர். அஸ்வின்.