லாகூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி பங்கேற்காமல் ஓய்வில் இருப்பதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி விட்டது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான அணி அங்கு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
