மும்பை: வரும் காலங்களில் தான் பாபர் அசாமின் முழு திறமையும் வெளிப்படும் என்று இந்திய முன்னாள் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதற்கு கேப்டன் பாபர் அசாமின் மோசமான கேப்டன்சியும், அணியை ஒருங்கிணைத்து வழிநடத்த முடியாததுமே காரணமாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் ராஜினாமா செய்தார்.
