For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திரும்பவும் முதலில் இருந்தா..!! நல்லா தானே போய்க்கிட்டு இருந்துச்சி..??

கராச்சி: எல்லா கோட்டையும் அழி, முதலில் இருந்து நான் ஆரம்பிக்கிறேன் என்ற பிரபல நகைச்சுவை போல் சீரியசான விஷயம் ஒன்று நடந்துள்ளது.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடினால், எங்கள் உயிரை வைத்து தீவிரவாதிகள் விளையாடி விடுவார்கள் என்று கூறி நியூசிலாந்து, இங்கிலாந்து நாடுகள் சென்றுவிட்டன.

இதனால் இழந்த மானத்தை காப்பாற்ற மேற்கிந்தியத் தீவுகளை வைத்து கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

அதன் படி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுடன் விளையாட வந்தது. வீரர்களின் பாதுகாப்பிற்காக 889 கமோண்டோ படை வீரர்கள், 3822 போலீசார் மற்றும் 500 RRF படை வீரர்கள், 46 டி.எஸ்.பி.கள்,315 என்.ஜி.ஓ.க்கள் மற்றும் 50 பெண் போலீசார் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபடுத்தியது,

பாகிஸ்தான் ஆதிக்கம்

பாகிஸ்தான் ஆதிக்கம்

வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இருந்து மைதானம் வரை பாதுகாப்பு படை விரர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் முதல் டி20 போட்டியில் எவ்வித சிக்கலும் இன்றி பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் வென்று தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து தொடரை முழுமையாக கைப்பற்ற பாகிஸ்தான் உத்வேகத்துடன் உள்ளது.

எதிர்பாராத சிக்கல்

எதிர்பாராத சிக்கல்

ஆனால், இங்கு தான் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்துள்ளது. 5000 பாதுகாப்பு படை விரர்களையும் தாண்டி, ஒரு எதிரி மேற்கிந்தியத் தீவுகள் அணியை பதம் பார்த்துவிட்டான். அது தான் கொரோனா.. கொரோனாவின் ஒமைக்கரான் வகையால் உலகம் முழுவதும் மீண்டும் பரவி வருகிறது. இதனால் பாகிஸ்தானிலும் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

PAK vs WI 5000 ராணுவ வீரர்களை நிறுத்த Pakistan உத்தரவு | Oneindia Tamil
வீரர்களுக்கு கொரோனா

வீரர்களுக்கு கொரோனா

மேற்கிந்தியத் திவுகள் அணியில் ஏற்கனவே ராஸ்டன் சேஸ்,கெயில் மயர்ஸ்,ஷில்டன் கொட்ரேல் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சாய் ஹோப், ஜஸ்டின் கிரிவ்ஸ்,அகைல் ஹூசைன் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் அணி நிர்வாகிகள் 2 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வர தொடங்கினால் பழைய மாதிரி மீண்டும் போட்டிகள் தடைப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Thursday, December 16, 2021, 19:30 [IST]
Other articles published on Dec 16, 2021
English summary
Pak vs WI Series in dangers as Players affected by corona.மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு, பாகிஸ்தான் தொடர் ரத்தாக வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+