
தோல்வி பயத்தில் பாகிஸ்தான்
இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு நம்பிக்கையின்மையை கொடுத்துள்ளதாக கூறுகிறார் மிக்கி ஆர்தர். எங்கே தோற்று விடுவோமோ என்ற பயம் அவர்களிடம் இருப்பதாக கூறினார் அவர்.

கோட்டை விட்ட கேட்ச்கள்
"இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்ச் கொடுத்தாலும் அவர்கள் அதை பிடித்துக் கொள்வார்கள். அதுதான் நேற்று நடந்தது" என பாகிஸ்தான் அணி கோட்டை விட்ட கேட்ச்கள் பற்றி குறிப்பிட்டார் பயிற்சியாளர் ஆர்தர்.

கவர்ந்த பும்ரா
அது போல, இந்திய அணியின் பும்ரா வலைப் பயிற்சியில் யார்க்கர் மேல் யார்க்கர் போட்டு பயிற்சி செய்தது தன்னை வெகுவாக கவர்ந்தது என குறிப்பிட்டார். நேற்று பும்ரா பந்தில் ரன் குவிக்க பாகிஸ்தான் அணி கடுமையாக தடுமாறியது.

அரையிறுதி போன்ற போட்டி
அடுத்த போட்டி ஒரு அரையிறுதி போல மாறியுள்ளது. எனவே பாகிஸ்தான் எப்படியாவது ஒரு வழியை கண்டுபிடித்து வென்றே ஆகா வேண்டும் என கூறினார் மிக்கி ஆர்தர்.


Click it and Unblock the Notifications