Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷகிபுல் ஹசன் அவுட் விவகாரம்..அது வேற வாய்.. இது வேற வாய்? பாக். வீரர் ஷதாப் கான் நடுவர்களுக்கு ஆதரவு

அடிலெய்ட் : டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சூப்பர் 12 சுற்றில் கடைசி நாளான இன்று நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது.

இதனால் தென்னாப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியதால் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு செல்லும் என நிலைமை மாறியது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இந்த நிலையில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் ஒரு சிறிய தவறு நடந்தாலே ஆட்டத்தின் போக்கே மாற்றிவிடும். நிலைமை அப்படி இருக்க நடுவர் செய்த மெகா தவறால் வங்கதேசத்தின் தலைவிதியே மாற்றிவிட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி தொடக்க வீரர் நஜிமுல் சாண்டோ 54 ரன்கள் எடுத்தார்.

அவுட் இல்லை

அவுட் இல்லை

வங்கதேச அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த நிலையில் ஷகிபுல் ஹசன் களத்துக்கு வந்தார். அப்போது ஷதாப்கான் வீசிய பந்தில் அவர் lbw ஆனார். எனினும் இது ரீப்ளேவில் நாட் அவுட் என தெரிந்தது. ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுத்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே இந்தியா விளையாடிய ஆட்டங்களில் நடுவர்கள் செய்த தவறுக்கு ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆப்ரிடி போன்ற வீரர்களே குற்றஞ்சாட்டினர்.

ஷதாப் கான் பேச்சு

ஷதாப் கான் பேச்சு

ஆனால் தற்போது நடுவர் செய்த தவறுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஆதரவாக பேசி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ஷகிபுல் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய ஷதாப்கானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், இந்த ஆட்டத்தில் இதுவரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். பந்துவீச்சாளர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறோம்.

நடுவர்கள் தீர்ப்பே இறுதி

நடுவர்கள் தீர்ப்பே இறுதி

ஆடுகளத்தில் உள்ள சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை கணித்து நாங்கள் விளையாடினோம். ஷகிபுல் ஹசன் விவகாரத்தில் நடுவர்கள் அவுட் கொடுத்து விட்டனர். நடுவர்கள் அவுட் என்று சொன்னால் நீங்கள் வெளியேறிவிட வேண்டும்.நடுவர்கள் சொல்வதே இறுதியானது என்று ஷதாப் கான் கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் பதிலடி

ரசிகர்கள் பதிலடி

இந்த பேச்சுக்கு இந்திய ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் நோபால் வழங்கிய போது அப்போது மட்டும் ஏன் பாகிஸ்தான் வீரர்கள் நடுவரிடம் போய் முறையிட்டனர் என்று கேள்வி எழுப்பினர். இதேபோன்று வங்கதேச ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்து ஏமாற்றி வெற்றி பெறுவதாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, November 6, 2022, 13:36 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+