
புது சர்ச்சை
இந்நிலையில் பாபர் குறித்து புதிய பூகம்பம் கிளம்பியுள்ளன. அதாவது பாபர் அசாம், தனது சக அணி வீரரின் காதலியுடன் ஆபாசமாக மெசேஜ் செய்துக்கொண்டிருந்துள்ளார். வீடியோ காலில் பேசுவதும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், " நீ என்னுடன் தொடர்ந்து இதே போல ஆபசமாக பேசிக்கொண்டும், நடந்துக்கொண்டும் இருந்தால், உனது காதலனை அணியில் இருந்து நீக்கவே மாட்டேன்" என உறுதி கொடுத்தது போல இடம் பெற்றுள்ளது.

அந்த பெண் யார்?
அது எந்த வீரருடைய காதலி என்பது இதுவரை தெரியவரவில்லை. மேலும் சிலர், அது பாபர் அசாம் கிடையாது, அவரை போன்றே உள்ள வேறு ஒருநபரின் வீடியோயை போலியாக உருவாக்கி பிரச்சினையை கிளப்பியுள்ளனர் என ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் வாரியம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும்.

இது முதல் முறை அல்ல
பாபர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வருவது இது முதல்முறையல்ல. இதாற்கு முன்னர் ஹமிசா முக்தர் என்ற பெண், பாபர் தன்னை பாலியல் ரீதியல் துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்த விசாரணைகளும் அப்போது நடத்தப்பட்டது. இறுதியில் புகழுக்காக பொய்யான குற்றச்சாட்டை வைத்ததாக அப்பெண்ணே புகாரை திரும்பப்பெற்றார். தற்போது மீண்டும் அதே போன்ற பிரச்சினை வெடித்துள்ளது.

சொந்த மண்ணில் தோல்வி
இது ஒருபுறம் இருக்க, பாபர் அசாமிற்கு சமீப காலமாகவே அழுத்தங்கள் சூழ்ந்துக்கொண்டே தான் உள்ளது. சொந்த மண்ணில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரையும், நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் பாகிஸ்தான் இழந்தது. இதற்கு பொறுப்பேற்று பாபரை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











