கொழும்பு: டி20 உலகக் கோப்பை 2026 குழு 'ஏ' போட்டியில், நமிபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது. இப்போட்டியில் சாகிப்சாதா ஃபர்ஹான் ஆட்டமிழக்காமல் சதம் விளாச, உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் கடைசி அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான், ஃபர்ஹான் 58 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். 3 இதனால் பாகிஸ்தான் விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. சல்மான் ஆகா 23 பந்துகளில் 38 ரன்களும், சதாப் கான் 22 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இலக்கை துரத்திய நமிபியா, 17.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நமிபியா அணியில் லாரன் ஸ்டீன்காம்ப் 23 ரன்கள் மற்றும் அலெக்ஸாண்டர் வால்சென்க் 20 ரன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். ஆட்ட நாயகனாக சாகிப்சாதா ஃபர்ஹான் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் சதாப் கான் 3/19 எனவும், உஸ்மான் தாரிக் 4/16 எனவும் அபாரமாகச் செயல்பட்டனர். இந்தியர்களிடம் அதிர்ச்சித் தோல்விக்குப் பின், பாகிஸ்தான் SSC மைதானத்தில் நமிபியாவை பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் முழுமையாக வென்றது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைகளில் ரன்கள் அடிப்படையில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
உஸ்மான் தாரிக், வில்லெம் மைபர்க்கின் விக்கெட்டை வீழ்த்தி நமிபியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார். தாரிக் 3.3 ஓவர்களில் ஒரு மேடனோடு 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது மிகச் சிறந்த டி20 பந்துவீச்சு புள்ளிவிவரத்தைப் பதிவு செய்தார். இதில் ரூபன் டிரம்ப்ல்மன் மற்றும் ஜே.ஜே. ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும்.
நமிபியா 32 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த நிலையிலிருந்து 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வேகமாகச் சரிந்தது. பாகிஸ்தான் கையாண்ட சுழல் பந்துவீச்சு உத்தி, சூப்பர் 8 சுற்றுக்கான அவர்களின் இடத்தை உறுதி செய்வதில் மிகச் சிறப்பாகப் பலனளித்தது. இந்த வெற்றியால், அமெரிக்காவின் உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.