IND vs PAK: எங்களை விட பாகிஸ்தானுக்கு தான் கூடுதல் சாதகம்.. இந்திய அணி துணை பயிற்சியாளர் கருத்து
மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி கொழும்பிலேயே தங்கியிருப்பதால், அவர்களுக்கு ஒரு சாதகமான சூழல் இருப்பதாக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்ஷேடே தெரிவித்துள்ளார். பிப்ரவரி 15 அன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.
பாகிஸ்தான் அணி தொடர் முழுவதும் கொழும்பில் இருக்கும் நிலையில், இந்திய அணி இலங்கைக்குள் பயணிக்க வேண்டிய சவாலை எதிர்கொள்கிறது. இது குறித்து பேசிய டென் டோஸ்ஷேடே, "பாகிஸ்தான் கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் உள்ளது.

அங்கே செல்வது ஒரு சவால். இருப்பினும், அடுத்த வாரம் நடக்கும் அந்தப் போட்டியில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம்" என்றார்.இதே போல் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இணைந்து தொடரை நடத்தியது. இந்தியா தனது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே ஆடி கோப்பையை வென்றது.
ஆனால் மற்ற நாடுகள் அதிக தூரம் பயணித்தது. இது இந்தியாவுக்கு "சாதகம்" இருந்ததாகப் பலரும் விமர்சித்தனர்.இந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா இலங்கையுடன் இணைந்து நடத்துகிறது. பாகிஸ்தான் தங்கள் அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே ஆடும். பிப்ரவரி 15 அன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது.
பாகிஸ்தான் அங்கு இன்னும் பயிற்சி செய்யவில்லை. ஆனால், பிப்ரவரி 10 அன்று இரண்டாவது லீக் போட்டி முடிவதால், பிரேமதாசாவில் பயிற்சி செய்ய அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும். இது பாகிஸ்தானுக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது.போட்டி நடைபெறுவது குறித்து தனக்கு ஆட்சேபனை இல்லை என டென் டோஸ்ஷேடே குறிப்பிட்டார். அணி, போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தயாரானதாக அவர் கூறினார்.
"இது ஒரு நிலையான நிலை என நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் மைதானத்திற்குச் சென்று அவர்கள் வராத வரை, விளையாடுவோம் என்றே கருதினோம்" என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடரில், இறுதிப் போட்டி உள்பட இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதின. இதில் அனைத்திலும் இந்தியாவே வென்றது. தற்போது, இலங்கையில் விளையாடிய அனுபவம், கூடுதல் பயிற்சி நேரத்துடன் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications